SLIDE-1-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-2-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-3-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

If you are going [...]

SLIDE-4-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-5-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

Monday, August 17, 2009

பூக்களும் காயம் செய்யும்...............!



போடி போடி கல்நெஞ்சி!



மார்புக்கு ஆடை

மனசுக்கு பூட்டு



ஒரே பொழுதில்

இரண்டும் தரித்தவளே!



காதல் தானடி

என்மீதுனக்கு?



பிறகேன்

வல்லரசின்

ராணுவ ரகசியம்போல்

வெளியிட மறுத்தாய்?



தூக்குக்கைதியின்

கடைசி ஆசைபோல்

பிரியும்போது ஏன்

பிரியம் உரைத்தாய்?



நஞ்சு வைத்திருக்கும்

சாகாத நாகம்போல்

இத்தனை காதல் வைத்து

எப்படி உயிர் தரித்தாய்?

By worldmazz with 1 comment



இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

By worldmazz with No comments


இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

By worldmazz with No comments



என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

By worldmazz with No comments


என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

By worldmazz with No comments


உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப்
பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்

செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்


சொல்லக்கூடிய

ஒரு கவிதையும்.

By worldmazz with No comments

ஷங்கர் கவிதைகள்.......!









By worldmazz with 1 comment

Monday, August 10, 2009

வானொலி........!

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.

மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே
மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர்.

இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

By worldmazz with No comments

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.

ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி-1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

By worldmazz with No comments

அலை அலை ..........!

அலை என்பது ஒரு தடை அல்லது கலகம் எற்ப்பட்ட பொருட்களிள் இருந்து உருவாகம். இது அந்தரம் மற்றும் சமயம் ஆகியவற்றை ஒற்றி சார்ந்திருக்கும் உதாரணம்மாக ஏரியில் ஒரு சிறியக் கல்லை எறிந்தால் அது வட்டம் வட்டம்மாக் அலைகளை உருவாக்கும். இவ்வாரு மின்காந்த அலை, ஒலியலை, கடல் அலை போன்று பல அலைகள் உள்ளன.

அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலை நீளமாக கொள்ளப்படும்.
அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும

வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஸைன் அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.

By worldmazz with No comments

தமிழ் ஒலிபரப்புத்துறை.......!

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது.

மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன.

1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது.

தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது.

By worldmazz with No comments

வானொலி நிகழ்ச்சிகள்.......!

1) செய்திகள்
2) கலந்துரையாடல்
3) நேர்முக வர்ணை
4) போட்டி நிகழ்ச்சிகள்
5) வானொலி நாடகங்கள்
6) விபரண நிகழ்ச்சிகள்,
7) பெட்டக நிகழ்ச்சிகள்
8) அறிவித்தல்கள்
9) ஆபத்துதவி நிகழ்ச்சிகள்
10) வாழ்த்துக்கள்
11) விளம்பரங்கள்
12) வானொலிச் சந்தை
13) நகைச்சுவை சொல்லல்
14) பாட்டுக்கள்,
15) பாட்டு நிகழ்ச்சிகள்
16) சந்திப்புக்கள்,
17) பட்டிமன்றம்
18) சிறுவர் நிகழ்ச்சிகள்
19) இளையவர் நிகழ்ச்சிகள்
20) முதியவர் நிகழ்ச்சிகள்
21) பெண்கள் நிகழ்ச்சிகள்
22) சமய நிகழ்ச்சிகள்
23) இலக்கிய நிகழ்ச்சிகள்
24) ஆய்வுரைகள் - analysis
25) விமர்சனம்

By worldmazz with No comments

ஒலியலை

ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம்.

வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது.

ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கலாகும்

By worldmazz with No comments

    • Popular
    • Categories
    • Archives