Monday, August 17, 2009

பூக்களும் காயம் செய்யும்...............!



போடி போடி கல்நெஞ்சி!



மார்புக்கு ஆடை

மனசுக்கு பூட்டு



ஒரே பொழுதில்

இரண்டும் தரித்தவளே!



காதல் தானடி

என்மீதுனக்கு?



பிறகேன்

வல்லரசின்

ராணுவ ரகசியம்போல்

வெளியிட மறுத்தாய்?



தூக்குக்கைதியின்

கடைசி ஆசைபோல்

பிரியும்போது ஏன்

பிரியம் உரைத்தாய்?



நஞ்சு வைத்திருக்கும்

சாகாத நாகம்போல்

இத்தனை காதல் வைத்து

எப்படி உயிர் தரித்தாய்?

By worldmazz with 1 comment

1 comments:

good post

http://alfrhnsby.blogspot.com

Post a Comment

    • Popular
    • Categories
    • Archives